சங்கரன்கோவில், ஆகஸ்ட் 15 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி திருக்கோயிலில் இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு பொது வழிபாடு நிகழ்ச்சி மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கோயில் துணை ஆணையர் கோமதி தலைமை வகித்தார்.
இந்து சமய அறநிலைத்தறை உயர்நிலை ஆலோசனை குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, கோயில் அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடர்ந்து பொதுமக்களுடன் சேர்ந்து உணவருந்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கோயில் சார்பில் வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா, மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முப்பிடாதி, முத்துலட்சுமி, கோயில் கண்காணிப்பாளர் ராஜகோபால், கோயில் பொறியாளர் முத்துராஜ் மற்றும் கணேசன், ஜெயக்குமார், கோயில் புறக்காவல் நிலைய காவலர் முத்துலட்சுமி, கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



