தஞ்சாவூர். மே 30.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோ ரை இழந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. இடைநிற்றல் இன்றி படிப்பை தொடர உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்து கல்வி பயிலும் மாணவர்களின் பொருளா தாரம் மற்றும் குடும்ப சூழல் குறித்து கள ஆய்வு செய்தும், கண்காணித்தும் அறிக்கை வழங்க அமைக்கப்பட்ட குழவினருக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினர்.
அப்போது அவர் கூறியிருப்ப தாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தை களின் கல்வி எந்த நிலையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில், பெற்றோர்களை இழந்து பள்ளி செல்லும் குழந்தைகளின் விவரங்களை சேகரிக்க உத்தர விடப்பட்டது. இதை தொடர்ந்து தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் திருவிடைமருதூர், பூதலூர் திருவையாறு, ஒரத்தநாடு
திருவேணம் மற்றும் பேராவூரணி ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
பள்ளி செல்லும் மாணவ – மாணவி களிடையே எடுக்கப்பட்ட ஆய்வில், பெற்றோரை இழந்தோர் 594 பேர், தாயை இழந்தோர் 2,417 பேர், தந்தையை இழந்தோர் 9,342 பேர் என மொத்தம் 12 ஆயிரத்து 353 பேர் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் இடை நிற்றல் இன்றி படிப்பைத் தொடர உரிய நடவடிக்கைகள் மேற் கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட குழுவிருடனான ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



