கிருஷ்ணகிரி,மார்.30- கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் பருகாயம் அடைந்தனர் அவர்களை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காயமடைந்தவர்களை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத் எம்பி காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து மருத்துவர்களை சந்தித்து சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
உடன் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சி.ரகு, ஜேசு துரைராஜ், அகா.கிருஷ்ணமூர்த்தி, ரயில்வே குழு உறுப்பினர் தளபதி ரகமத்துல்லா, நகரத் தலைவர் லலித் ஆண்டனி, எஸ்.சி.எஸ்.டி.பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகசுப்பிரமணி, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ஜாவித் கான், இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமரேசன்,
ஒபிசி மாவட்ட தலைவர் ஆஜித் பாஷா, வட்டாரத் தலைவர் அயோத்தி உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை எம்பி ஆறுதல்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics