சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லாடனேந்தல் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து
கேட்டறிந்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கா.வானதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



