கோவை மார்ச் 29
கோயம்புத்தூர் மத்திய புலனாய்வு பிரிவு குழுவினரால் சூலூரில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 5145 லிட்டர் எரிசாராயம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு, கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் தர்கா அருகே ஒரு லாரியை வழிமறித்து சோதனை செய்த போது அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 215 வெள்ளை நிற கேனில், 7525 லிட்டர் எரிசாராயம் கடத்திவரப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து லாரி மற்றும் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு ஓட்டுநர்களையும் போலீசார்
கைது செய்து
விசாரணை நடத்திய போது இந்த எரிசாராயம் கர்நாடகா மாநிலம் தார்வடத்திலிருந்து பாலக்காடு கேரளாவுக்கு கடத்திவரப்பட்டதாக கூறியுள்ளனர்.
மேலும்
இந்த எரிசாராயம் கள்ளில் கலக்கும் நோக்கத்துடன் கடத்திவரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த செயல்பாட்டின் முக்கிய மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டு முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.