தருமபுரி குமாரசாமி பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மகா கணபதி ஹோமம், சக்தி கரகம் அழைப்பு மற்றும் திருக்கோயில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தீ மிதிப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள், பெண்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனார். செவ்வாய்க்கிழமை முனியப்பனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், புதன்கிழமை அம்மனுக்கு பால்குடம் ஊர்வலமும் ,அன்று இரவு அருள்மிகு ஸ்ரீ தாண்டவேஸ்வரருக்கும் ,ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் முக்கிய நிகழ்வான வியாழக்கிழமை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் பூத வாகனத்தில் மயான கொள்ளை பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



