தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சங்கரன்கோவில் அருகே உள்ள வேட்டரம்பட்டியில் வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடந்தது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் லாலாசங்கரபாண்டியன் தலைமை வகித்தார்.தென்காசி எம்பி ராணி ஶ்ரீ குமார் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு பரமகுரு, மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் செண்பக விநாயகம், நெல்லை கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, மாவட்ட பொருளாளர் சரவணன், யூனியன் துணைச் சேர்மன் செல்வி, ஒன்றிய அவை தலைவர் நடராஜன், ஒன்றிய துணை செயலாளர்கள் வைரமுத்து, மணிகண்டன், தங்கம்மாள், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் திருமலைச்சாமி முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் ஹைதர் அலி வரவேற்றார் .இதில் இளம் பேச்சாளர் ரேவதி, தலைமை கழக பேச்சாளர்கள் நெல்லை முத்தையா, நெல்லை குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். , கூட்டம் முடிவில் மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.



