திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக
புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா, கல்வி, மற்றும் விளையாட்டு விருது வழங்கும் விழா.
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா,கல்வி மற்றும் விளையாட்டு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக Rtn.Major Donor G..சுந்தரராஜன், Rtn.MPHF.S.சண்முகம், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் Rtn.M.செல்வகனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கும்,தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை போடாமல் வந்த ஆசிரியைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து இன்ட்ராக்ட் கிளப்பின் தலைவராக பள்ளி மாணவி V.தனிஷ்யா, செயலாளராக பள்ளி மாணவி M.ரேணுகா. ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை Rev.Sr. அனிதா கேத்தரின் OSM , பள்ளி ஆசிரியைகள் , மேற்கு
ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் Tmt.D.கரோலாபொன்மணி நன்றி கூறினார்.