புதுக்கடை, பிப்-11
புதுக்கடை அருகே பரக்காவிளையை சேர்ந்தவர் கமலம் (87). இவரது பேரன் பிரசாந்த் என்ற கண்ணன் (36). இவர் மது குடித்துவிட்டு தனது பாட்டியை தினமும் கெட்ட வார்த்தைகளால் திட்டுவது வழக்கமாம்.
இந்த நிலையில் நேற்று கமலத்தின் வீட்டில் அத்துமீறி நுநைந்த பிரசாந் கெட்ட வார்த்தைகள் பேசி கம்பியால் கமலத்தை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த கமலம் காஞ்சிரகோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கமலம் மகள் சாந்தி என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.