எட்டயபுரம், ஆக. 11 –
எட்டயபுரம் அருகில் இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. பேரணியை பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கீதா அவர்கள் துவக்கி வைத்தார்.
போதைப் பொருட்களால் ஏற்படும் சமுதாய சீர்கேடுகள், உடல் நலன் கெடுதல் ஆகியவை பற்றி பள்ளி தலைமையாசிரியர் மு.க. இப்ராஹிம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நமது கிராமத்தைப் புகை, மது இல்லாத கிராமாக மாற வேண்டும் என ஆசிரியர் இந்திரா வலியுறுத்தினார்.
பேரணி மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியைப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் எடுத்துக்கொண்டனர்.



