கோவை, ஜூலை 03 –
கோவை ஓசூர் சாலையில் உள்ள கொடிசியா அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் கொடிசியா அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியானது தற்போதைய இந்திய வேளாண்மைத் துறை சார்ந்து நடைபெறும் ஒரு மாபெரும் கண்காட்சியாகும்.
இந்த கண்காட்சி வேளாண்மை, தோட்டக்கலை, பால் பண்ணை தொழில், கோழி வளர்ப்பு மற்றும் உணவுப்பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்த நவீன மேம்பாடுகளை காட்சிப்படுத்துகின்ற ஒரு தளமாக விளங்குகிறது.இந்த துறைசார்ந்த அறிவுப் பரிமாற்றம் தொழில்நுட்ப புத்தாக்கங்களை ஊக்குவித்தல், விவசாயிகளின் மேம்பாட்டிற்கு உதவும் தொடர்புகளை வழங்குதல், வேளாண் வணிகம் செய்வோர் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.
இந்த அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி, வேளாண் துறை சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்துதலுக்கான மாபெரும் வாய்ப்பையும் வேளாண் வணிக தொடர்புகளையும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பையும் வழங்குகிறது. இந்த கண்காட்சியானது சிறு உற்பத்தியாளர்களையும், புத்தாக்கம் செய்வோரையும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், விற்பனையாளர்கள் மற்றும் சர்வதேச தொழில் பிரமுகர்களையும் நேரடியாக இணைக்கிறது.
இந்தியாவின் மாபெரும் வேளாண் கண்காட்சியான அக்ரி இன்டெக்ஸ் 2026யின் 24ம் பதிப்பு வருகின்ற ஜூலை மாதம் 9 ம் தேதி முதல் 13ம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.ஜூலை 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை (A, B, C, D, E, G & H நாற்றுப் பண்ணை மற்றும் விலங்குகளுக்கான வெளிப்புற வளாகம், காட்சி இயந்திரங்களுக்கான வெளிப்புற வளாகம் (B ஹால் முன்பு) ஆகிய வளாகத்தில் நடைபெறுகிறது என்று தெரிவித்தனர்.



