களியக்காவிளை, டிச. 23 –
குழித்துறை – பாறசாலை ரயில் தண்டவாள பகுதியில் நேற்று இரவு கன்னியாகுமரி – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் ஒரு வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். ரயில் இஞ்சின் டிரைவர் இத்தகவலை நாகர்கோவில் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.
நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டனர்.
சடலத்தின் அருகில் ஒரு செல்போன் கிடந்துள்ளது. அதனை ஆய்வு செய்த போலீசார் களியக்காவிளை பகுதியை சார்ந்த வாலிபர் என தெரிய வந்ததை அடுத்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்த வாலியர் களியக்காவிளை பகுதியை சார்ந்தவர் அருள்தாஸ் மகன் ஜெரின் (25) என்பதும், இவர் களியக்காவிளை தவெக கட்சியின் பேரூராட்சி 4-வது வார்டு செயலாளர் என தெரிந்தது. வாலிபர் ஏன்? எதற்காக தற்கொலை செய்தார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.



