ராமநாதபுரம், ஜன. 20 –
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி ஐக்கிய ஜமாத் மற்றும் இந்து மத தர்ம பரிபாலன சபை சார்பில் தொண்டி பேரூராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை போர்கால அடிப்படையில் செய்து தரக் கூறி தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தொண்டி பாவோடி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் சையது அலி தலைமை வகித்தார். தொண்டி இந்து மத தர்ம பரிபாலன சபை தலைவர் எல் ஆர் சி ராஜசேகர் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் ஷெரீப், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் கனிமுதன், தமிழகத்தின் பிரபல மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் சண்முகராஜா, தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.
வன்னியர் சங்கம் மாநில துணைத்தலைவர் ஆனந்தன், தொண்டி ஐக்கிய ஜமாத் துணைத் தலைவர் வழக்கறிஞர் முகமது ஜிப்ரி, காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், எஸ் டி பி ஐ கட்சியின் வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக், திருவாடானை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், சிபிஎம் நகரச் செயலாளர் காளிமுத்து, மமக மாவட்ட துணை தலைவர் கவுன்சிலர் பெரியசாமி, இந்தியக் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் கணேசன், காங்கிரஸ் நகர் தலைவர் காத்தர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர் செயலாளர் முருகன், எஸ்டிபிஐ கட்சி நகத்தலைவர் முகமது நாசர் அலி, சமூக ஆர்வலர்கள் சிக்கந்தர் காஜா மைதீன், அகமது பாய்ஸ் ஆகியோ கலந்து கொண்டு பேரூராட்சி நிர்வாக அவலங்கள் குறித்தும் மக்கள் படும் வேதனைகள் குறித்தும் ஆதங்கத்துடன் பேசினர்.
கூட்டத்தில் தமிழகத்தில் திராவிட மாடல் அரசு நாட்டு மக்களின் நலன் அக்கறை கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொண்டி பேரூராட்சியில் திமுக கட்சி சார்பாக உள்ள தலைவர் அவருடைய மகன் சேர்ந்து தொண்டி மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி பணிகளை செய்யாமல் பேரூராட்சியில் நிதி முறைகேடு செய்து வருகின்றனர். ஆளும் திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது. எனவே திமுக தலைமைக் கழகம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு காட்டி வாக்களிக்க மாட்டோம் என்பதை திமுக தலைமைக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
கடந்த பத்து ஆண்டுகளாக தொண்டி பேரூராட்சி அனைத்து மக்களும் எவ்வித வரிபாக்கியம் இல்லாமல் 100% வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கடந்த நான்கு ஆண்டுகளாக வார்டு 1 முதல் 15 வரை மக்களுக்கு தேவையான சாலை வசதி வாறுகால் வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் முழுமையாக மக்களுக்கு செய்து தராமல் ஏமாற்றி வருகின்றனர். பேரூராட்சி செயல் அலுவலர் பேரூராட்சி தலைவி இவர்களின் கவனக்குறைவால் பல இடங்களில் வாறுகால் சாக்கடை நீர் ஓடாமல் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கு உடனடி நடவடிக்கையாக வாறுகால் சுத்தம் செய்யவும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவும் உரிய நடவடிக்கை எடுக்க கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக் கூட்டத்தில் இந்துமத தர்ம பரிபாலன சபை துணைத்தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.



