தஞ்சாவூர், செப்டம்பர் 27 –
தஞ்சாவூரில் புதிய நூலக கட்டிடம் ரூபாய் 50 லட்சத்தில் மதிப்பில் தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி. செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலக த்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவியர்கள் நிறைய பேர் படித்து வருகின்றனர். மாணவர்களின் வசதிக்காக கூடுதல் நூலக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலக கட்டிடம் கட்டுவதற்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்ட நூலக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டப் பட்டுள்ளது .இந்த புதிய நூலக கட்டிடம் திறப்பு விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார் எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அனைவரை யும் வரவேற்றார்.
விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய நூலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
பின்னர் அவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் புதிதாக வாங்கி கொடுத்த புத்தகங்களையும் வழங்கினர். மேலும் பள்ளிகளை தேடி நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தின் கீழ் பள்ளி, படிப்புகளை முடித்த மாணவ, மாணவிகள் மாவட்ட மைய நூலகத்தில் படிக்கும் போட்டி தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்காக தங்களது புத்தங்களை வழங்கினார். நிறைவாக மாவட்ட நூலக அலுவலர் அபூர்வம் நன்றி கூறினார்.



