சூலூர் பழைய பேருந்து நிலையம் முன்புறம் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் அல்வா கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின்
மும்மொழிக் கொள்கையை திணிப்பதை கண்டித்தும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் தளபதி முருகேசன் தலைமையில், அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் மன்னவன், கௌதம், கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா, சூலூர் துணைத் தலைவர் கணேஷ், பசுமை நிழல் விஜயகுமார், மறுமலர்ச்சி திமுக கருணாநிதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின் போது, திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், பொதுமக்களுக்கு அல்வா வழங்கி, மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து. இந்த போராட்டம் நடைபெற்றது.



