நாகர்கோவில், மே 26 –
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேயர் (பொ) மேரி பிரின்சி லதா இன்று பல்வேறு பகுதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கோட்டார் இளங்கடை பாவாகாசிம் தர்கா எதிரே உள்ள சாலையில் மழைநீர் வடிகால் ஓடை இல்லாததால் அந்த பகுதியினர் அவதிப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் மின்விளக்குகள் வசதிகள் இல்லை எனவும் கூறப்பட்டது. இதையடுத்து அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இடலாக்குடி பகுதியில் செயல்பட்டுவரும் கோழிக்கடையில் கொசு புழுக்கள் உற்பத்தியாகும் நிலையில் பல நாட்களாக தேக்கி வைக்கப்படிருந்த தண்ணீர் பீப்பாயை மேயர் முன்னிலையில் அதிகாரிகள் அப்புறப்படுத்தினார். மேலும் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
மேலும் தென்மேற்கு பருவமழை நெருங்குவதை ஒட்டி, நாகர்கோவில் மாநகராட்சி 48 ம் வார்டுக்குட்பட்ட லாலாவிளை மற்றும் பிற பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏதும் இன்றி எளிதாக சென்று வர அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வெள்ளாடிச்சி விளை, லாலாவிளை பகுதில் குடிநீர் வசதி வேண்டும் என கேட்ட கோரிக்கையின் பேரில் குடிநீர் வசதி செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த ஆய்வின் போது மாநகர நல அலுவலர் மரு. சரோஜா மற்றும் உதவி செயற்பொறியாளர் ரகுராம், மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜிபாபு மற்றும் பலர் உடனிருந்தனர்.



