ஈரோடு, மே 2 –
ஈரோடு மாவட்ட எச் எம் எஸ் சார்பில் ரெயில்வே கூட்செட்டில் மே தின விழா கொண்டாடப்பட்டது. கூட்செட் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். துணை தலைவர் பழனிச்சாமி துணை செயலாளர் கோபி நாத் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் எச் எம் எஸ் சங்க கொடியை மாவட்ட செயலாளர் ஜீவா சண்முகம் ஏற்றி வைத்தார். எஸ் ஆர் எம் யூ சேலம் கோட்ட செயலாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர் செந்தில் குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மாவட்ட பொருளாளர் யுவராணி, மகளிர் அணி செயலாளர் ஜோதிமணி, கூட்செட் லாரி அசோசியேஷன் செயலாளர் குழந்தை சாமி ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு சங்க துண்டு மற்றும் புத்தாடைகளை வழங்கினர்.



