மார்த்தாண்டம், மார்ச் 23 –
மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (40). கொத்தனார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரடி ரெனால்ட் என்பவருக்கும் வழிப்பாதை பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவ தினம் செல்வகுமார் சாங்கை என்ற பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பிரடி ரெனால்டு மற்றும் அவரது மகன் சேர்ந்து தகாத வார்த்தைகளால் செல்வகுமாரை திட்டியதுடன், கம்பி மற்றும் ஆயுதங்களால் அவரை தாக்கியுள்ளனர். மேலும் சிமெண்ட் கல்லை எடுத்து அவரது காலில் போட்டு காலை உடைத்துள்ளனர்.
பலத்த காயம் அடைந்த செல்வகுமாரை அக்கம் பக்கத்தினர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் கொத்தனாரை தாக்கிய தந்தை மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


