கிருஷ்ணகிரி மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Toll gate அருகில் திரு. கண்ணன், காவல் உதவி ஆய்வாளர், Mobile -II, மற்றும் அவரது தலைமையிலான காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தபோத ஓசூர் பக்கமிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த TN57AR 9586, அசோலையிலண்ட் தோஸ்த் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 1. ராஜேந்திரன் @ சரவணகுமார் (38) s/o வெள்ளைசாமி, 2. மணிக்கண்டன் (45) s/o சாஸ்தாதேவர், 3. சந்தோஷ் (22) s/o கதிர்வேல் ஆகியோர் சுமார் ரூ 6,00,000/- மதிப்புள்ள 900 கிலோ குட்காவை கர்நடாக மாநிலம் பெங்களுரில் வாங்கி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் மேற்கண்ட குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் பாகலூர் காவல் நிலைய சரகம், கக்கனூர் சோதனை சாவடியில் சர்ஜாபுரம் பக்கமிருந்து வந்த KA01JP 1249 Jupiter வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் ரூ 27,000/- மதிப்புள்ள 672 கர்நாடக மாநில மதுபான பாட்டில்கள்களை விற்பனைக்காக பாகலூருக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. மேற்கண்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் 1. சஞ்சீவ் (25) s/o ஜவரேகவுடா, ஆனேக்கல் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி, அரசு மதுபானம், மணல் கடத்தல், பனங்கள் விற்பனை, விபச்சார தொழில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் காவல் துறையினருக்கு 9498181214 என்ற தொலைபேசி எண் மூலமாக அல்லது Whatsapp மூலமாக தகவல் தெரிவிக்கலாம். மேற்படி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.