திண்டுக்கல் மாநகராட்சி இயல்பு கூட்டம் மாநகராட்சி கூட்டம்,
கூட்ட அரங்கில் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், தலைமையில் நடைபெற்றது.
துணை மேயர் ராஜப்பா,
ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ள உள்ள திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூட்டம் நிறைவடையும் தருணத்தில் திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் பெயரினை வைக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள்,
கூட்ட அரங்கில் கூட்டரங்கிற்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயரை மாற்றம் செய்யக்கூடாது என கண்டித்து கோஷங்களைமாமன்ற கூட்டு அரங்கில் எழுப்பியவாறு
மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன் தலைமையில் கூட்ட அரங்கினை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.