புதுக்கடை, மார்ச் 16 –
புதுக்கடை அருகே அரசகுளம் பகுதியை சேர்ந்தவர் லாசர் (55). கொத்தனார் வேலை செய்யும் இவர் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கொத்தனாரான ரெத்தின மணி (52) என்பவருக்கு 5 வருடங்களுக்கு முன்பு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். அதன் பிறகு அந்த பணத்தை அடிக்கடி கேட்டும் பணத்தை ரெத்தினமணி திருப்பி கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்ததாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் சம்பவ தினம் லாசர் மீண்டும் பணம் கேட்டபோது ரெத்தின மணி கெட்ட வார்த்தைகள் பேசி கம்பால் லாசரை தாக்கியுள்ளார். மேலும் ரெத்தின மணியின் மகன் அஸ்வின் (25) என்பவரும் லாசரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் தலையில் காயமடைந்த லாசர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


