தருமபுரியில் உள்ள மருந்து வணிகர்கள் சங்க அரங்கத்தில் சாலை பணியாளர் சங்கங்களின் இணைப்பு மாநாடு
நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார்.ஜெய் பிரகாஷ், நாராயணன் வரவேற்புரையாற்றினார். மாநில பொறுப்பாளர்கள் மகேந்திரன், பாஸ்கர், காஜா, மொய்தீன், சுடலை, ரவிச்சந்திரன், செல்லபாண்டியன், ஈஸ்வரன், மாது ,முத்துசாமி ,ஆறுமுகம் ,தேரிலிங்கம், கென்னடி, பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சாலை பணியாளர் சங்கத்தில் பொறுப்பாளர் அர்ஜுனன் துவக்க உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாநில சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன், சுகமதி, ஜெயச்சந்திரராஜா, சுவாமிநாதன், கோவிந்தராஜன், மூர்த்தி, கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், செந்தில், சிவகுமார், ஆறுமுகம், பூங்கொடி ,முருகேசன், உமா சங்கர் ஆகியோர் உட்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பரமசிவன் நன்றி கூறினார்.