By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை:  கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை:  கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் பறிமுதல்
தமிழ்நாடுதருமபுரி

நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை:  கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் பறிமுதல்

Last updated: July 18, 2026 7:21 pm
July 18, 2026
3 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 18 –

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் மற்றும் கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகளைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக பத்திரப்பதிவு அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசு அலுவலகங்களில் திடீர் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை சுமார் 4 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில், ஆய்வாளர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டது. அந்த நேரத்தில், புதிதாக பொறுப்பேற்ற கோட்டாட்சியர் ஜார்ஜ் தலைமையில் அமைதிக்குழு (Peace Committee) கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து பொதுமக்களை வெளியே அனுப்பிவிட்டு சோதனையைத் தொடங்கினர்.

பின்னர், வட்டாட்சியர் பிரசன்ன மூர்த்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அலுவலக ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அலுவலகத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்ட நிலையில் ஆவணங்கள், பணப் பதிவேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. இந்த சோதனையின் போது, கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அதிரடி சோதனை, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உலக உணவு பாதுகாப்பு தின விழா
தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு விழா: நடிகர் சிவகுமார் பங்கேற்பு
புதுக்கடை அருகே தீயில் கருகிய மூதாட்டி உயிரிழப்பு
சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 63 விடுதிகளுக்கு சீல் வைப்பு
அபிராமம் நகரில் சேதமடைந்த பிரதான சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

காலபைரவர் மூலவருக்கு சிறப்பு அலங்காரம்

February 22, 2025
62 Views
அரசு நலத்திட்ட உதவிகளை பால் வளத்துறை அமைச்சர்
தருமபுரியில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
கல்லூரியில் சர்வதேச சிட்டுகுருவிகள் தினம்
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account