நீலகிரி. மார்ச்.22
சர்வதேச சிட்டுக்குருவி தினம் மற்றும் உலக கதை சொல்லல் தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து கோத்தகிரி பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணர்வ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முன்னதாக கேத்தரின் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதலாமாண்டு தலைவர் மஞ்சுளா தலைமையுரையாற்றினார். நிகழ்ச்சியினை மாணவி அஜ்மத் நிஷா தொகுத்து வழங்கினார் .முன்னதாக நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து கலைசுடர்மணி, கதைசொல்லி நீலகிரி நிர்மலா மாணவர்களிடையே கதை சொல்லி தலைமையுரையாற்றினார். உலக கதை சொல்லல் தினத்தை முன்னிட்டு கதைகள் மூலம் பல பள்ளி கல்லுரி மற்றும் பழங்குடியின பெண்களுக்கு கதைகள் மூலம் விழிப்புணர்வு சேவையாற்றி வரும் நீலகிரி நிர்மலாவை பலரும் பாராட்டியதோடு, மாணவர்களும் கதை சொல்லி பேசியதை ஆரவாரம் செய்து ரசித்தனர். சிறப்பு அழைப்பாளராக நீலகிரிமாவட்ட கவிஞர் அகரம் சிவா கலந்துகொண்டு தெரிவித்த கருத்துகளாவன,
தமிழகத்தின் உயிர்ச்சூழல் மண்டலமான
நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாகும். . 55 சதவீதிதம் காடுகளை கொண்டுள்ளது. இங்கு எண்ணிலடங்கா பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகளில் சில பறவை இனங்கள் தற்போது காண்பது அரிதாகி வருகின்றது.
மேற்குதொடர்ச்சி மலையின் அரியவகை பறவைகளில் ஒன்றான இருவாச்சி பறவை அழிவின விளிம்பில் உள்ளன. மேலும் சிட்டு குருவி இனங்கள் அழிந்து வரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இவைகள் அழிந்து வர முக்கிய காரணம் செல்போன் கோபுரங்களில் இருந்து வரும் கண்ணுக்கு தெரியாத கதிர் வீச்சு என சொல்லப்படுகிறது. இந்த கதிர் வீச்சால் நகரங்களில் அதிகாலை நேரங்களில் கேட்கும் இனிமையான பறவைகளின் சத்தம் கேட்பது குறைந்து வருகிறது. இருபது வருடங்களுக்கு முன் அதிகாலை வேளைகளில் நாம் கண் விழிப்பதே இந்த இனிமையான பறவைகளின் சத்தத்தில் தான் இருந்தது.
மேலும், அந்த கால கட்டங்களில் கான்க்ரீட் வீடுகள் இல்லாமல் கூரை ஓய்ந்த வீடுகள் இருந்ததால் இதை போன்ற சிறு பறவைகள் இங்கு வாழ்ந்து வந்தன.
இந்நிலையில் தற்போது வயல்வெளிகளில் இரசாயனம் கலந்த மருந்துகள் தெளிப்பதாலும், செல்போன் கோபுரங்கள் அதிகரிப்பாலும், கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரிப்பாலும் சிட்டுக்குருவி இனங்கள் தற்போது குறைந்து வருகிறது.
இந்நிலையில் இன்று கண்மூடி தனமான காடுகள் அழிவால் காலநிலை மாற்றத்தால் நீலகிரியில் வெப்பநிலை 100 டிகிரியாக. பதிவாகி இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே மாறி வரும் காலநிலையை மீட்டுடெடுத்து சர்வதேச சிட்டுக்குருவிகள் தின்தில் பறவைகளை பாதுகாக்க உறுதியேற்போம் என தனதரையில் தெரிவித்தார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளரான கதை சொல்லி நீலகிரி நிர்மாலா, கவிஞர் அகரம்சிவா ஆகியோரை கல்லூரி விரிவுரையாளர் சீனிவாசன் கெளரவித்தார். மாணவர்கள் சார்பாக மாணவி பிரசிதா நன்றி கூறினார்.



