தென்காசி, அக். 10 –
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் இலஞ்சி குமாரர் கோவிலில் சிறப்பு பூஜையுடன் வழிபாடு நடத்தினர். இந்நிகழ்விற்கு தென்காசி பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சேது.அரிகரன், மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட தலைவர் குலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன் கலந்து கொண்டார். கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் மகாதேவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழரசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்குமார், ஒன்றிய செயலாளர்கள் ரவி, கருப்பசாமி, சண்முகசுந்தரம், தென்காசி நகர தலைவர் பழனி, ஒன்றிய தலைவர் தண்டபாணி, செங்கோட்டை நகர செயலாளர் சுப்பையா பாண்டியன், கடையநல்லூர் நகர துணைத் தலைவர் முருகன், அச்சன்புதூர் நகர தலைவர் அப்துல் மஜித், இலஞ்சி நகர தலைவர் செந்தில், ஊடக பிரிவு தலைவர் பாஸ்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.



