ஈரோடு, ஜூலை 18 –
தோட்டக்கலை துறையில் உள்ள உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் UATT 2.0 திட்டத்தினை கைவிட வேண்டி வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை துறை அலுவலகர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தின் தோட்டக்கலை துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் தோட்டக்கலை இயக்குனர் மாவட்டத் தலைவர் நர்மதா, தோட்டக்கலை அலுவலர் மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசு கடந்த 2023ம் ஆண்டு கொண்டு வந்து உள்ள உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற திட்டத்தினால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகளின் நலன் கருதி அந்த திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்,
வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகம், விற்பனைத்துறை ஆகிய மூன்று துறை கண்காணிப்பாளர்களை ஒன்றிணைத்து மேற்படி மூன்று துறையுடன் சேர்ந்து வேளாண் பொறியாளர் துறையின் திட்டங்களை சேர்த்து நான்கு துறை பணிகளை ஒரு கண்காணிப்பாளர் என மேற்கொள்ள வேண்டும். இதுவே இத்திட்டத்தின் நோக்கமாகும்
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடியும் கைகளில் பதாகைகள் ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



