மதுரை ஜூன் 28,
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ஒரு கோடிக்கு மேல் காணிக்கை
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் திரு.ச.கிருஷ்ணன் முன்னிலையில் இத்திருக்கோயில் மற்றும்
உபகோயில்களான தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், திருவாதவூர் திருமைாதர் சுவாமி கோயில் உள்பட 11 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பின்போது திருக்கோயில் அறங்காவலர்குழுத் தலைவர் மற்றும் அவரது பிரதிநிதி, திருக்கோயில் அறங்காவலர்கள், மதுரை, இந்து சமய அறநிலையத்துறை. உதவி ஆணையர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள். மதுரை (தெற்கு) மற்றும் மதுரை (வடக்கு) சரக ஆய்வர்கள். திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். உண்டியல் திறப்பின் பொழுது மக்கள் காணிக்கையாக ரொக்கம் ரூ.1,09,68,901/- (ரூபாய் ஒரு கோடியே ஒன்பது இலட்சத்து அறுபத்து எட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று மட்டும்). பலமாற்று பொன் இனங்கள் 536 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 1613 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 420 ஆகியவை இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.