திருப்போரூர் ஒன்றியத்தில் 10 கும் மேற்பட்ட கோயில்களில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நாவலூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஏரிக்கரை ஸ்ரீ பழண்டியம்மன் ஆலய புனராவர்தன ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் அருள்மிகு ஏரிக்கரை ஸ்ரீ பாண்டியம்மன் ஆலயத்தை நாவலூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாலட்சுமி ராஜாராம் முழு முயற்சியில் பொதுமக்கள் ஒத்துழைப் போடு புதியதாக அம்மன் சன்னதி கோபுரம் மற்றும் கோவில் மண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டு புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏறாளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நாவலூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாலட்சுமி ராஜாராம் ஏற்ப்பாட்டில் வருகை புரிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கினார்.