தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தருமபுரி மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வி. ஜெட்டிஅள்ளியில் நடைபெற்றது. தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளரும் தருமபுரி சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான தருண் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் டி .எல். காவேரி வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் வாக்கு சாவடி முகவர்கள் நியமனம், வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, முத்துலட்சுமி, கௌதம், மாதேஷ், உதயசூரியன், அன்பழகன், ஆசைதம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பிடமனேரியில் உள்ள காது கேளாதோர் பள்ளியின் அருகே கட்சி கொடியை மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கியும், காது கேளாதோர் பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது .இதில் திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



