தருமபுரி, செப்.20:
தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி 2026-ல், அரசு பணியாளர்களுக்கான கைப்பந்து போட்டியில் தருமபுரி மாவட்ட காவல்துறை அணி முதலிடம் பிடித்தது.
இப்போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் தருமபுரி மாவட்ட காவல்துறை அணி முதல் இடத்தையும், தருமபுரி அரசு பணியாளர்கள் அணி இரண்டாம் இடத்தையும், தீயணைப்புத்துறை அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. முதலிடம் பிடித்த காவல்துறை அணியை துறை அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் பாராட்டி வருகின்றனர்.



