மார்த்தாண்டம், மார்ச் 26 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொது குழு உறுப்பினர் உமாரதி களியக்காவிளை அருகே சாத்தங்கோடு தனியார் மண்டபத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மக்கள் நீதி மைய தலைவர் தேர்தலை புறக்கணிக்கிறத்தில் எந்த வித ஆச்சரியமோ, அதிசயமோ கிடையாது. கடந்த முறை கோவையில் எங்களது தேசிய மகளிர் அணி தலைவியிடம் தோல்வியடைந்து பின்னங்கால் பின்னறி அடிக்க ஓடியவர். ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு வேண்டி காலை பிடித்து கொண்டிருந்ததை நாம் பார்க்க தானே செய்தோம். ஆகையால் அவர் இந்த தேர்தலை புறக்கணித்து இருக்கலாம்.
வைகோவை பொறுத்த வரையில் அவர் ஒரு மூத்த அரசியல்வாதியாக இருந்தாலும் கூட இன்று அவர் அறிவாலயத்தின் செக்யூரிட்டி ஆக தான் இருந்து கொண்டு இருக்கிறார். ஆகையால் அவங்களுக்கு தெரியும். திமுக தோற்கிற கூட்டணி என்பதால் ஒருவேளை புறக்கணித்து இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
தவெகவை தற்போது ஜட்ஜ்மென்ட் பண்ண முடியாது. அவர்களுக்கு இது முதல் தேர்தல். இப்போ தானே களத்துக்கே வந்து இருக்கிறார்கள். மக்கள் கொடுக்க கூடிய வாக்குகளை பொறுத்து தான் யார் அவர்கள் பக்கம் நிற்கிறார்கள் என்பதை முடிவு பண்ண முடியும்.
கட்சி மேலிடம் முடிவு செய்து கிள்ளியூர் தொகுதியை தமாகவிற்கு ஒதுக்கி இருக்கிறது. நிச்சயமாக எங்களை பொறுத்த வரைக்கும் தவெக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி. குமரி மாவட்டத்தில் இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக நிறுத்த கூடிய 6 வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. என்று பேட்டியின் போது அவர் தெரிவித்தார்.



