By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கேட்டு பாரதிய கிசான் சங்கம் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கேட்டு பாரதிய கிசான் சங்கம் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கேட்டு பாரதிய கிசான் சங்கம் ஆர்ப்பாட்டம்

Last updated: July 30, 2026 6:36 pm
July 30, 2026
36 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 30 –

தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கவும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பாரதிய கிசான் சங்கம் (தமிழகம்) சார்பில் இன்று நாகர்கோவிலில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 5 ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகளின் அனைத்து விவசாய கடன்களையும் எவ்வித நிபந்தனைமின்றி உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வனத்துறை மற்றும் தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ 60 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பது உறுதி செய்ய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெயை உணவு எண்ணெயாக அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ள கோக்கனட் ப்ரோமோஷன் ஸ்கீம் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து சலுகைகளும் தடை இன்றி கடைக்கோடி விவசாயிகளுக்கும் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயத்துறை, உணவுத்துறை மற்றும் வருவாய் துறையாக இவற்றை இணைத்து ஒரு கூட்டு மேலாண்மை அமைப்பை தமிழகம் முழுவதும் உருவாக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு பாரதிய கிசான் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமை தாங்கினார். மாவட்டம் பொருளாளர் ராமதாஸ், மாநில தலைவர் பார்த்தசாரதி, மாநில செயலாளர் முருகன், மாநில அமைப்பாளர் குமார், தென்காசி மாவட்ட தலைவர் ஹரிரங்கநாதன், சிவனயா, பெரியசாமி, ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி – சேலம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் புகையிலை பொருள்களை விற்ற கடைக்கு சீல் வைப்பு: சோதனையில் 2வது முறை கண்டுபிடிக்கப்பட்டதால் 50,000 அபராதம்
இரணியல் அருகே நகை மோசடி – 6 பேர் மீது வழக்கு பதிவு
மார்த்தாண்டம் லாரிகள் மோதி பயங்கர விபத்து
அரசு ரப்பர் தோட்ட தொழிலாளி யானை தாக்கி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் கனரக லாரி டிரைவர்கள் மீது வழக்கு

May 15, 2025
50 Views
போக்குவரத்துத் துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி
சென்னை தலைமை செயலகத்தில் காணொளிக்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account