சேலம், ஜூலை 24 –
சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31.07.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண்: 115 – மகிழம் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. சேலம் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் சேலம் மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக எரிவாயு பெறும் வாடிக்கையாளர்கள், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு முகவர்கள் பங்கு பெறும் எரிவாயு நுகர்வோர்களுக்கான ஜூலை – 2026 மாதத்திற்கான குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.



