மதுரை, ஜூலை 18 –
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் அனைத்து சங்கங்களுக்கும் ஈடு இணையற்ற ஒப்பற்ற தலைவராக திகழ்ந்த தானைத் தலைவர் சிவ.இளங்கோ அவர்களின் 90 வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மதுரை மாவட்ட தலைவர் அ. இளங்கோ தலைமையில் மதுரை மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் பாதுகாவலனாக ஒப்பற்ற தலைவராக திகழ்ந்த தானைத் தலைவர் சிவ. இளங்கோ, அனைவரின் கோரிக்கைகளை ஐந்துக்கும் மேற்பட்ட முதலமைச்சர்களுக்கு கொண்டு சென்று நிறைவேற்றிக் கொடுத்து அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின், அனைத்து நிலை பணியாளர்களின் கோரிக்கைகளை சலுகைகளாக பெற்றுத் தந்த மகத்தான தலைவர் சிவ இளங்கோ.
அவர்களின் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் வெ.மகேந்திர குமார் மாநில பொருளாளர் பெ.திலகர், மாநிலத் துணைத் தலைவர் சசிகுமார் மாநிலச் செயலாளர்கள் சண்முகசுந்தரம் மற்றும் ஆதி.குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், மேனாள் மாநில பொதுச் செயலாளர் மாவட்ட தலைவருமாகிய செ.சுருளிராஜ், மாவட்ட பொருளாளர் வெ.இளங்கோ, மேனாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள், செந்தில்குமார், சரவணன், சசி, மணிகண்டன், கருப்பையா, வேம்படியான், கோபி கண்ணன், வட்ட கிளை நிர்வாகிகள், கூட்டமைப்பு தலைவர்கள், அம்மா உணவக பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகேஸ்வரி, பரமேஸ்வரி, கே சுமதி, எ. சுமதி, தீபா லட்சுமி, வான்மதி, ஈஸ்வரி, பிரேமா, ஒயம்மாள், அடைக்கலம், வாணி, தமிழ்ச்செல்வி, செல்வி உள்ளிட்ட நிர்வாகிகளும் வட்டக்கிளை இணைப்புச் சங்க நிர்வாகிகளும் ஓய்வு பெற்ற தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



