தென்காசி, ஆகஸ்ட் 16 –
கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்திருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கூறி வருவதை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை உத்தரவின்படி தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சுரண்டையில் பாஜக அரசை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சுரண்டை பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா சிலை வரை சென்றனர்.
ஊர்வலத்தில் “வாக்குத்திருடனே! பாஜக அரசே! ஆட்சியை விட்டு விலகு” என்று பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், நகர பொருளாளர் ஈஸ்வரன், பிரேம் குமார், ரஃபீக், சுப்பிரமணியன், தியாகராஜன், சட்டநாதன், பெருமாள், கதிரவன், tk பாண்டியன் மற்றும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



