திருச்சி, ஜுன் 16 –
திருச்சி மாவட்டம் துரங்குறிச்சி அருகே உள்ள தெத்தூர் அரசு தொடக்கப்பள்ளி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு இருந்ததாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாம்பு பிடிப்பான் உதவியுடன் பாம்பை லாவகமாகப் பிடித்த அவர்கள், வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்தப் பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.



