தருமபுரியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தருமபுரி மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற நகர கழக சார்பில் நகரக் கழக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் எம். வடிவேல் அவைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது.பூக்கடை ரவி நகர கழகச் செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். செ. செம்மலை கழக அமைப்புச் செயலாளர், கே. பி. அன்பழகன் மாவட்ட கழக செயலாளர், எஸ். ஆர். வெற்றிவேல் தர்மபுரி மாவட்டம் அம்மா பேரவை செயலாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். எம் பார்த்திபன் தருமபுரி நகர கழகப் பொருளாளர் நன்றியுரை ஆற்றினார். கழகத்தின் வளர்ச்சிப் பணி குறித்தும் மக்கள் பணிகள் குறித்தும் பேசினார்கள்.இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழகம் மற்றும் சார்பு அமைப்பு சார்ந்த அனைத்து நிர்வாகிகளும் மற்றும் கழக செயல் வீரர்கள், வீராங்கனைகள் திரளாக கலந்து கொண்டனர்.



