ஈரோடு, ஜூலை 24 –
ஆடி வெள்ளியையொட்டி இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஈரோடு வைரபாளையம் வாய்க்காலில் இருந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். இதில் சில பெண்கள் அம்மன் வேடம் அணிந்து வந்தனர். இதை பார்த்த பெண்கள் பக்தி பரவசத்தில் அவர்களிடம் ஆசி பெற்றனர். இந்த பேரணி வைராபாளையம் நால்ரோடு பவானி மெயின் ரோடு வழியாக சென்று ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவிலை அடைந்தது. இதன் பிறகு தீர்த்த குடம் எடுத்து வந்த புனித மஞ்சள் நீரை அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியை திருப்பூர் கோட்ட குறிஞ்சி சேகர் தொடங்கி வைத்தார். இந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவர் த.ஜெயமணி மற்றும் மாவட்ட பொது செயலாளர் பூர்ணிமா, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மாவட்ட செயலாளர் சுதா, மாவட்ட துணைத் தலைவர் பேபி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சித்ரா, அலமேலு இந்து முன்னணி பொறுப்பாளர்கள் இந்து, காயத்ரி, லோ லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



