களியக்காவிளை, ஜூன் 19 –
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பெருமலை பகுதியை சார்ந்த தங்கப்பன் மனைவி கமலபாய் (72). இவர் இன்று நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து களியக்காவிளை வந்த அரசு பேருந்தில் பயணம் செய்தார். இவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வைத்து அடையாளம் தெரியாத பெண் திருடியுள்ளார்.
இது குறித்து களியக்காவிளை போலீசுக்கு தகவல் கிடைத்த உடனே சப் இன்ஸ்பெக்டர் மகேந்த் தலைமையில் போலீசார் திருத்தவபுரத்தில் வைத்து அந்த பஸ்சை நிறுத்தி அனைத்து பயணிகளையும் சோதனை செய்தனர்.
அப்போது தூத்துக்குடி மாவட்டம் மந்திதோப்பு, ராஜகோபாலபுரம், பகுதியை சார்ந்த செல்வராஜ் மனைவி மஞ்சீஸ்வரி என்பவரை விசாரித்த போது அவரிடம் இருந்த 7 சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சீஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



