திருச்சி, ஜூன் 16 –
திருச்சி அரியமங்கலம், ஸ்டாலின்நகர் பகுதியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. கூலித் தொழிலாளர்கள் அதிகம் வாழும் இப்பகுதியில், பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் மின் இணைப்பு அல்லது பட்டா வழங்கப்படவில்லை. மின்சாரம் இல்லாததால் மாணவ, மாணவிகள் விளக்கு வெளிச்சத்தில் படிக்க வேண்டியுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு மற்றும் பட்டா வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



