திருச்சி, ஜூன் 16 –
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் தலைமையில் திங்கட்கிழமை, 15.06.2026 அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மேயரிடம் சமர்ப்பித்தனர்.
இக்கூட்டத்தில் ஆணையர் வீர் பிரதாப் சிங், துணை மேயர் ஜி. திவ்யா, மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், துணை ஆணையர் சுல்தானா, நகரப் பொறியாளர் அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர். மாநகர மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் இக்கூட்டம் நடைபெற்றது.



