திருச்சி, ஜூன் 16 –
திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே அல்லூர் மேலபச்சேரி கிராமத்தில், மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை குக்கர் மூடியால் அடித்து கொன்ற விவசாய கூலி தொழிலாளி செந்தில் குமார் கைது செய்யப்பட்டார். செந்தில் குமார் மதுப்பழக்கத்தால் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்று மதுவுக்கு பணம் கேட்டுள்ளார். மறுத்ததால் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகி, ஆத்திரமடைந்த செந்தில்குமார் குக்கர் மூடியால் மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.


