தஞ்சாவூர், ஜூன் 13 –
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா திருவையாறு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கூட நாணல் பகுதியில் உள்ள 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் ரேவதி வழங்கினார் முரசொலி எம்பி, திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை வழங்கிய மாவட்ட கலெக்டர் ரேவதி பேசியதாவது: மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான இருப்பிட தேவையை பூர்த்தி செய்வதில் வருவாய் துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் அடிப்படையில் தகுதி வாய்ந்த மக்களுக்கு விலையில்லா வீட்டு மனைகளை வழங்கி வருகிறது. தற்போது கூட நாணல் பகுதியைச் சேர்ந்த 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, திருக்காட்டு பள்ளியில் பேரூராட்சி தலைவர் மெய்யழகன் வட்டாட்சியர் விவேகானந்தன் மற்றும் வருவாய் துறை, பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



