பரமக்குடி, நவ. 10 –
பரமக்குடி ஆயிரம் வைசிய மேல்நிலைப் பள்ளியில் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக மரக்கன்றுகளை நட்ட என்சிசி மாணவர்கள்.
இந்தியா சுதந்திரம் வேண்டி போராடிய பொழுது வந்தே மாதரம் என்ற வார்த்தை இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சுதந்திர வேக்கையை உருவாக்கியது. இந்தப் பாடல் உருவாகி 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் என்சிசி மாணவர்களின் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்திய ராணுவ அதிகாரி ஹவில்தார் குரிந்தர் சிங் தலைமையில் பள்ளியின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மரக்கன்றுகளை நட்டார். இந்த குமரேசன் உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். என்சிசி ஆபிஸர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.



