By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சகோதரர் கொலைக்கு பழிக்கு பழியாக தொழிலாளி வெட்டிக் கொலை: 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சகோதரர் கொலைக்கு பழிக்கு பழியாக தொழிலாளி வெட்டிக் கொலை: 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

சகோதரர் கொலைக்கு பழிக்கு பழியாக தொழிலாளி வெட்டிக் கொலை: 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு போலீஸ் வலை வீச்சு

Last updated: July 29, 2026 5:04 pm
July 29, 2026
4 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜூலை 28 –

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் மதுரை வீரன் (35), செப்டிக் டேங்க் கிளீனர். இவரது மனைவி பார்வதி (28). இவர்களுக்கு பாக்கியம் (12) என்ற மகளும், நந்து (10), ராகுல் (9) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது மதுரை வீரன் கேரளாவில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் அவர் ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரை அடுத்த மறுகால் தலை பகுதியில் உடலில் வெட்டு காயங்களுடன் மதுரை வீரன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ மர்மநபர்கள் சராமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி சூப்பிரண்டு ஸ்டாலின், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தனீஷ் லியோன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு மதுரை வீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை தொடர்பாக மதுரை வீரனின் அக்கா கணவர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் தனீஷ் லியோன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகள் மற்றும் கொலைக்காண காரணம் குறித்து விசாரணை நடத்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பரண்டு பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரை அடுத்த மறுகால்தலை பகுதியை சேர்ந்த மாரியப்பன் தம்பி செல்லையா என்பவரின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் வகையில் அவரது குடும்பத்தினர் மதுரைவீரனை கொலை செய்தது தெரியவந்தது. அவரை சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரை அடுத்த மறுகால்தலைப்பகுதியை சேர்ந்த மாரியப்பன் (32), அவரது தாய் நாச்சியார் (53), மாரியப்பனின் மனைவிகள் முத்துலெட்சுமி (25) மற்றும் சரண்யா (25), மாரியப்பனின் தங்கை ஐஸ்வர்யா (19) ஆகிய 5 பேரும் சேர்ந்து வெட்டி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

மதுரைவீரன் குடும்பத்தாருக்கும் மாரியப்பன் குடும்பத்தாருக்கும் செப்டி டேங்க் வண்டி ஓட்டுவதில் பிரச்சினை ஏற்பட்டு மாரியப்பனின் தம்பி செல்லையாவை 2021ம் ஆண்டு குளச்சல் போலீஸ் நிலையை எல்கைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து மதுரை வீரன் கும்பல் கொலை செய்தது. அந்த வழக்கு தற்போது தக்கலை பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினமும் மதுரை வீரன் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது மாரியப்பன் மதுரைவீரனை சமரசம் பேச அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பேரில் மதுரை வீரன் சென்று இருக்கிறார். அப்போது மாரியப்பனின் குடும்பத்தினர் மதுரை வீரன் உடன் தகராறு செய்தது மட்டுமின்றி அவர்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக மதுரை வீரனை வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த மதுரை வீரன் சம்பவ இடத்திலேயே பலியானார். கோர்ட்டுக்கு சென்று வந்த மதுரை வீரனை மாரியப்பன் உள்ளிட்டோர் திட்டமிட்டு வரவழைத்து சராமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மாரியப்பன், அவரது தாய் நாச்சியார், மாரியப்பனின் மனைவிகள் முத்துலெட்சுமி, சரண்யா, மாரியப்பனின் தங்கை ஐஸ்வர்யா ஆகிய 5 பேர் மீதும் சுசீந்திரம் போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். மேலும் அவர்கள் 5 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் இறங்கினர். அப்போது அவர்கள் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்று கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட மதுரை வீரனின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். பழிக்குபழியாக தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தால் சுசீந்திரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்ட மதுரைவீரன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருக்கின்றது. இதனால் அவரது பெயர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் கொலையில் தலைமறைவாக உள்ள மாரியப்பன் மீதும் பல வழக்குகள் உள்ளது. அவரது பெயர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை வீரன் கொலையில் மொத்தம் 5 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களில் மாரியப்பனை தவிர 4 பேரும் பெண்கள் ஆவர். கொடூரமான முறையில் நடந்திருக்கும் ஒரு கொலை சம்பவத்தில் 4 பெண்கள் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே திருத்துவபுரத்தில் ஆப்டிகல் சூறை; 8 பேர் மீது வழக்கு
குற்றியாறு ரப்பர் தோட்டத்தில் யானை மிதித்து ரப்பர் தொழிலாளி படுகாயம்
2-வது நாளாக சாலை மறியல்; நாகர்கோவிலில் 50 ஆசிரியர்கள் கைது
கருங்கல் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை தனிப்படை போலீசார் விரட்டிப் பிடித்தனர்; 3 பேர் தப்பி ஓட்டம்
சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ரவுடி கைது

December 8, 2025
50 Views
கொட்டாரதில் மறைந்த எம்.பி.,வசந்தகுமார் நினைவு தினம்
117வது பிறந்தநாள் விழா; என்.எஸ். கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து நடக்கும் பேரழிவுகளை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
விவசாயிகள் சங்க கல்லூரி பொன்விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account