திருப்பூர், ஏப். 28 –
மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி குறித்து ஒரு கட்சியின் தலைவர் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள். இதனால் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறார்கள். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



