நாகர்கோவில், பிப்.12-
கன்னியாகுமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகர்கோவில் மாநகராட்சி மாவட்ட செயலாளராக செயல்பட்டவர் அல் காலித். இவர் அந்த கட்சியில் இருந்து இப்போது வெளியே வந்து புரட்சி விடுதலை சிறுத்தை கட்சி என்ற கட்சியை துவங்கியுள்ளார். விரைவில் சென்னையில் வைத்து கட்சியின் அறிமுக விழா கூட்டம் நடைபெறும்.
தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளுக்கும் மாநில பொறுப்புகளுக்கும், பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளார்கள்.
என்ற தகவலை கட்சியின் நிறுவனத் தலைவர் அல்காலித் தெரிவித்தார்.



