தென்காசி, அக்டோபர் 02 –
தென்காசியில் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்த நாளை முன்னிட்டும் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டும் தென்காசி பெரிய கோவில் அருகில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கும் கர்மவீரர் காமராஜரின் திரு உருவ படத்திற்கும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, பொதுச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், நகர பொருளாளர் ஈஸ்வரன், வட்டாரத் தலைவர்கள் பெருமாள், கதிரவன், நகர் மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ரஃபீக் மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



