நாகர்கோவில், ஜூன் 12 –
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட தெங்கம்புதூர், செம்மாங்குளம், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட தெங்கம்புதூர் பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.64.68 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 85 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இதன் வாயிலாக 24 மணி நேரமும் மநாகராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியும். கிருஷ்ணன் கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் மாநகராட்சி கல்வி நிதி 2025-2026 திட்டத்தின் கீழ் முதல்வர் படைப்பகம் ரூ.3.10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கட்டுமன பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக மாநகராட்சி சார்பில் குமரி மாவட்டத்திலேயே பசுமை சூழ்ந்த ஒரு எழில் மிகுந்த பகுதியாக மாற்ற வேண்டுமென்ற நோக்கில் நாகர்கோவில் மாநகராட்சியின் சார்பில் 6 வது மாநில நிதி ஆணைய நிதியின் 100 அண்டு பழமையான கீழ் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செம்மாங்குளத்தில் ரூ.6.59 கோடி மதிப்பில் தற்போது ஆரம்பிக்கப்பட்டு, தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த செம்மாங்குளமானது பொதுப்பணி நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. முக்கியமாக தூர்வாரும் போது குளத்தின் நீர்மட்டத்தினை குறையமால் பார்த்துகொள்ள வேண்டும். இருக்கிற நீர்மட்டத்தை அப்படியே வைத்துக்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் குளங்களை சுற்றி ஆக்கிரமிப்பு பகுதிகள் இருந்தால், அது தொடர்பான மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக செம்மாங்குளத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடம், பூங்கா, குளத்தின் ஒருபுறம் மின்விளக்குகள்அமைத்து, மரக்கன்றுகள் நட்டு பறவைகளுக்கான ஒரு சின்ன தீவு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளது. இப்பணிகள் அனைத்தையும் நான்கு ஐந்து மாதங்களுக்குள் முடித்திட நாகர்கோவில் மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூலதன மாணிய நிதியின் கீழ் ரூ.8.95 கோடி மதிப்பில் வடசேரி பேருந்து நிலையம் பகுதியில் 100 கடைகள் கொண்ட மார்க்கெட் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடவும், தரமானதாக இருப்பதை உறுதி செய்திடவும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வுகளில் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் வசந்தி, நகர திட்டமிடுனர் பொறி.கெபின் ஜாய், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் பொறி.ரகுராமன், நகர்மன்ற உறுப்பினர் அக்ஷயா கண்ணன், பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



