நாகர்கோவில் கோபால பிள்ளை மருத்துவமனை அருகில் உள்ள சாலையில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில் உடைபட்டு சிதறி கிடந்த கண்ணாடி துகள்களை போக்குவரத்து தலைமை காவலர் மணிகண்டன் மற்றும் பெண் காவலர் ஆகியோர் தாமாக முன்வந்து கண்ணாடி துகள்களை சுத்தம் செய்து அப்புறப்படுத்தினர். போக்குவரத்து காவலரின் மனிதநேயமிக்க செயலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினர்.



